4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : பொது வீதியில் தண்டித்த பொதுமக்கள்!!

345

abuse

பொலிவியா நாட்டில் 4 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞனை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கிய பின்னர் தூக்கிலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பொலிவியாவின் ரீயெஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் 4 வயது சிறுமி ஒன்றை மாயமான வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் புறநகர் பகுதியில் இருந்து குறித்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தொடர்புடைய சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு பின்னரே கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகுந்து தாக்கி குறித்த நபரை அங்கிருந்து இழுத்து வந்துள்ளனர்.

முக்கிய தெரு வழியாக இழுத்து வந்து குறிப்பிட்ட பகுதியில் வைத்து அந்த நபரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அதே மரத்தில் தூக்கிலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எண்ணிக்கை குறைவான பொலிசார் இருந்ததால் பொதுமக்களின் இச்செயலை தடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சிறுமியின் உடலும் பொதுமக்களால் தூக்கிலிடப்பட்ட நபரின் உடலையும் பொலிசார் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரையும் பொலிசார் கைது செய்யவில்லை. இருப்பினும் சம்பவத்தில் தொடர்புடைய கிராம மக்களை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.