வவுனியா பெரியார்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (13.11.2016) காலை 10 மணிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் மூங்கில் கன்றுகள் நாட்டும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட மூங்கில் கன்றுகள் இலங்கையில் முதற்தடவையாக வவுனியாவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பில் 1000 மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.





























