இன்று(15.11.2016) காலை வாகன விபத்தொன்றிலிருந்து வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இன்று காலை வவுனியா கற்குளத்தில் நிகழ்வொன்றில் கலந்துவிட்டு செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக பயணித்துக்கொண்டிருந்தபோது பூனாவ என்னும் இடத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்த காரின் முன் இயத்திரக் கவசம் (வொனட்) கழன்று முன் கண்ணாடியில் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி அதனை அவதானித்துக்கொண்டதனால் உடனடியாக காரினை வீதியின் ஓரமாக நிறுத்தியதால் பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதுடன் இந்த விபத்தில் தெய்வாதீனமாக வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் காயங்களின்றி தப்பியுள்ளார்.








