கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை!!

503

murder

பலாங்கொடை ரஜவக்க பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டதன் பின்னர் இவரின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.