முழங்காவில் நாச்சிக்குடாப்பகுதி கடையொன்றில் நேற்று மாலை ஏற்ப்பட்ட தகராறு காரணமாக இரண்டு குழுக்கள் மோதுண்டதில் ஒரு இரு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் குறித்த பகுதி பதற்ற நிலையில் இருப்பதாகவும் மீண்டும் மோதல் ஏற்படாதவாறு முழங்காவில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.