யாழில் திருட்டுக் குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் இளைஞரஞம் கைது!!

499

arrest

திருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் திட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே நேற்று புதன்கிழமை இரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அவர்களது வீட்டில் வைத்தே கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்படும் போது, அவர்களது உடமையில் இருந்து 2 மடிக்கணனிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும், குறித்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.