இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 62 ஓட்டங்களால் தோல்வி!!

275

AFP_I5198

சிம்பாபேவில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில், நேற்று இலங்கையை எதிர்கெண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இதற்கமைய களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 49.2 ஓவர்களில், 227 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜே.எல். கார்டர் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து 228 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான தனஞ்சயடி சில்வா மூன்று ஓட்டங்களுடனும், குஷல் பெரேரா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அதன் பின்னர் வந்த வீரர்களும் அரைச்சதம் கூட பெற முடியாத நிலையில் மேற்கிந்திய தீவு வீரர்களின் பந்து வீச்சில் தடுமாறி வரிசையாக வௌியேறினர்.

எனினும் சஜித் பத்திரண சற்று நிதானமாக ஆடி 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்தநிலையில், 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை 165 ஓட்டங்களை மட்டுமே பெற்று 62 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.