வீரபுரம் பிரிவிற்குட்பட்ட அரசடிக்குளம் அ.த.கபாடசாலை, பெரியபுளியாலங்குளம் பிரிவிற்குட்பட்டகக்காரங்குளம் இளங்கோ வித்தியாலயம், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் மற்றும் முதலியார்குளம் றோ.க.பாடசாலை என்பவற்றிற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்குமாகாண சுகாதார அமைச்சருமாகிய DR.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2016ம் ஆண்டுக்கான நிதியில்இருந்து நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15.11.2016 செவ்வாய்க்கிழமை குறித்த பாடசாலைகளுக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக மாணவர்களிடம் குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதிகள் கையளிக்கப்பட்டது.
இதன்போது அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், மாணவர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
சிறுநீரக பாதிப்பின் தாக்கம் அதிகம் கொண்ட பிரதேசம் என்ற வகையில் சிறுவயதிலிருந்தே மாணவர்கள் சுத்தமான குடிநீரை பருகுதலை ஊக்குவித்தல் என்னும் அமைச்சரின் விசேட செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சரின் நிதியில் இருந்து குறித்த நீர் சுத்திகரிப்புஇயந்திரத்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.