வவுனியா சாந்தசோலை, கிறசர் வீதியிலுள்ள மின்கம்பம் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மேல் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இவ்விடம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா மின்சார சபைக்கு அப்பகுதி மக்கள் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை.
நேற்று முன்தினம் (15.11.2016) மாலை 6.38 மணிக்கு வடமாகாண மின்சாரசபை மக்கள் தொடர்பகம் (021 2024444) தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டவர் தெரிவிக்கையில்,
முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு நான்கு மணித்தியலாயத்தில் திருத்தப்பணிக்கு வேலையாட்கள் செல்வதாக தெரிவித்திருந்தார். எனினும் நேற்று 16.11.2016 பிற்பகல் ஒரு மணிவரை மின்கம்பத்தில் திருத்தவேலைகள் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக இம் மின்கம்பம் வீதியிலிருந்து சரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீட்டிற்கு மேல் விழும் நிலையில் உள்ளது. இவ்வீதியிலுள்ள 5 வீடுகளுக்கு மின்கம்பம் கிழே விழுந்தால் சேதம் ஏற்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்படவாய்ப்புகள் உள்ளதையும் அவ்வீதியால் பொதுமக்கள் பயணம் செய்வதையும் தெரிவித்தும் அதிகாரிகள் திருத்தப்பணிகள் மேற்கொள்ள முனவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








