வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் கடந்த 13.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி கலைவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதி அரசாங்க அதிபர், வடமாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி வவுனியா, வவுனியா பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை கீதத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்புரை,கௌரவ விருந்தினர் உரை, கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
























