பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக யாசகம் பெற்ற பெண் ஒருவருக்கு 20 ரூபா அபராதம்!!

215

beggars

தனது சிறு வயது மகள்மார் இருவர் மற்றும் 6 வயது மக­னுடன் களுத்­துறை போதிக்கு அருகில் கடந்த போயா தினத்­தன்று வாக­னங்­க­ளுக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடை­யூறை ஏற்­ப­டுத்தும் வகையில் யாசகம் பெற்ற குற்­றத்தை ஏற்றுக் கொண்ட 38 வய­தான மூன்று பிள்­ளை­களின் தாய்க்கு களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் உதேஷ் ரண­துங்க 20 ரூபா அப­ராதம் விதித்துத் தீர்ப்­ப­ளித்தார்.

இப்­பெண்ணின் 9 வயது மற்றும் 8 வயது மகள்மார் மற்றும் 6 வயது மக­னையும் பெண்ணோ அல்­லது அவ­ரது கண­வனோ பொறுப்­பேற்க முன்­வ­ரா­ததால் இம் மூன்று பிள்­ளை­க­ளையும் சிறுவர் இல்­லத்தில் அனு­ம­திக்கும் படி நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இப்­பெண்ணின் 9 வயது மகள் பண்­டா­ர­கம பிர­தேச பாட­சாலை ஒன்றில் கல்வி பயில்­வ­தா­கவும் விடு­முறை தினங்­களில் பொரு­ளா­தாரப் பிரச்­சினை கார­ண­மாக தாயுடன் யாசகம் பெறச் செல்­வ­தா­கவும் பொலிஸ் நிலை­யத்தில் தெரிவித்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.