தனது சிறு வயது மகள்மார் இருவர் மற்றும் 6 வயது மகனுடன் களுத்துறை போதிக்கு அருகில் கடந்த போயா தினத்தன்று வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் வகையில் யாசகம் பெற்ற குற்றத்தை ஏற்றுக் கொண்ட 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்க்கு களுத்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உதேஷ் ரணதுங்க 20 ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இப்பெண்ணின் 9 வயது மற்றும் 8 வயது மகள்மார் மற்றும் 6 வயது மகனையும் பெண்ணோ அல்லது அவரது கணவனோ பொறுப்பேற்க முன்வராததால் இம் மூன்று பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கும் படி நீதிவான் உத்தரவிட்டார்.
இப்பெண்ணின் 9 வயது மகள் பண்டாரகம பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயில்வதாகவும் விடுமுறை தினங்களில் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தாயுடன் யாசகம் பெறச் செல்வதாகவும் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.