பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு பெண்களை ஏற்றுமதி செய்த இருவர் கைது!!

592

pro

மாலை­தீ­வுக்கு பாலியல் தொழி­லா­ளி­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து பெண்­களை ஏற்­று­மதி செய்து வந்த மிகப்­பெ­ரிய வர்த்­தக வலை­ய­மைப்­புடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தே­க­ ந­பர்கள் இருவரை கைது செய்­துள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் கடு­வலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவர்களை எதிர்­வரும் 21 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த ஒன்­றரை மாத நடவடிக்கையின் விளை­வாக இச்­சந்­தேக நபர்கள் இரு­வரும் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்­த­தாக தெரி­வித்­துள்­ளனர்.

அத்­துடன் சந்­தேக நபர்­க­ளினால் பத்­த­ர­முல்ல பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த விடுதியொன்றில் இருந்து, இது­வ­ரையில் பாலியல் தொழி­லா­ளி­க­ளாக அனுப்­பப்­பட்ட பெண்­களின் புகைப்­ப­டங்­களும் இனி­வரும் காலங்­களில் அனுப்­பு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த பெண்கள் சிலரின் புகைப்­ப­டங்­க­ளுடன் கட­வுச்­சீட்­டுகள் பலவும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணியகத்தினரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.

இச்­சந்­தேக நபர்கள் பெண் ஒரு­வ­ருக்கு மாத­மொன்­றுக்கு 1 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாவை கொடுப்பன­வாக வழங்கி இலங்­கையை சேர்ந்த பெண்­களை இவ்­வாறு மாலை­தீ­வுக்கு அனுப்­பி­யுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. அத்­துடன் 100க்கும் அதி­க­மான இலங்கை பெண்கள் இவ்­வாறு சந்­தேக நபர்களால் மாலை­தீ­வுக்கு பாலியல் தொழி­லுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்று வெளிநாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கை­யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைது செய்வதற்காக பணியகத்தினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.