வவுனியாவில் இளைஞன் மீது வாள்வெட்டு : படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!!

540

vaalvettu

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்றைய தினம் (17.11.2016) இரவு 8 மணியளவில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

தனது வீட்டில் இருந்து சுய தேவைக்காக கடைக்குச் சென்று திரும்பிய நபரான சுப்பையா தயாகரன்(27) என்பவர் மீதே வாள் வீச்சு இடம்பெற்றுள்ளது. இவ் வாள்வீச்சில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ் வாள்வெட்டு சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.