வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் நேற்று (17.11.2016) மாலை மோட்டார் சைக்கிலை கடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிலை நேற்று (17.11.2016) மாலை 4.30 மணியளவில் நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று (18.11.2016) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையினையடுத்து அபயரத்தன (50955) தலைமையிலான சிசில் குமார (23298) , நிஸாம் (84963) , லவன் (7828) , விஜயரத்ன (10335), நிஷான்(61309) குற்றத்தடுப்பு பொலிஸார் குழுவினர் குறித்த சந்தேக நபரை சற்று முன் கைது செய்துள்ளனர்.
இவரிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.











