கடலில்மூழ்கி சீனப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு!!

662

sea

வெலிகம பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி கவலைக்கிடமான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். 29 வயதுடைய சீனப் பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.