கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (19.11.2016) காலை 5.45 மணியளவில் அதிக வேகம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
பேரூந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் பேரூந்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






















