வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபானசாலையை மூடு இல்லையேனில் போராட்டம் வெடிக்கும்!!

943

 
வவுனியா பூந்தோட்டத்தில் இன்று (20.11.2016) சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரியும் கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபானசாலைகளை மூடுமாறு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

கடந்த தீபாவளி தினத்தில் சிலர் மது போதையில் பூந்தோட்டம் பகுதியில் கைகலப்பில் ஈடுபட்டதுடன் இரண்டு சமூகங்களுக்கு இடையிரான பிரச்சனையாக உருவெடுத்திருந்த நிலையில் அதன் எதிரொலியாக பூந்தோட்ட மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள்,

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு வருபவர்களால் மது அருந்திவிட்டு கிரமங்களில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்படுகிறது. இது மக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கின்றது வவுனியா பூந்தோட்டத்தில் மாத்திரமல்ல வவுனியாவில் கிராமப்புறங்களில் மதுபானசாலைகள் அதிகரித்து வருகிறன. ஆகவே கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும்.

மதுபானசாலைகள் சில நேரங்களில் இன ஐக்கியத்திற்கும் இடையூறாக செயல்ப்படுவதினால் அவைகள் மூடப்பட வேண்டும் அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட மதுபானசாலையை அகற்றுவதற்காக கிராம மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும் அது ஜனாதிபதி மட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

1 dsc_0959 dsc_0960 dsc_0961 dsc_0962 dsc_0963 dsc_0965 dsc_0966 dsc_0967 dsc_0968 dsc_0970