வவுனியா புளியங்குளத்தில் மரக்கடத்திலில் ஈடுபட்ட மூவர் கைது!!

551

 
வவுனியா புளியங்குளங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ( 19.11.2016) முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை வவுனியா புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பொலிஸ் அத்தியட்சகர் வி.எஸ்.ரி.விதானகே தலைமையில் ஆர்.ஜெயசூர்ய, எம்.ஜெயசிங்க, ஜெயசூர்ய, டபிள்யு.ஏ.எம்.கருணாரத்தின, விதானபத்திரன, ஜெயம்பதி அகிய குழுவினரே மரக்கடத்தலில் ஈடுபட்ட முவரை கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஜந்து முதிரை மரக்குற்றியின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் பெறுமதி வாய்ந்தமை எனவும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறியரக உழவு இயத்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

news-1 news-2 news-3