இலங்கை பொலிஸின் 150வது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும் குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (20.11.2016) காலை 10.30 மணிக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி, இலங்கை கடற்படை தளபதி, வவுனியா மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் சுத்தமற்ற குடிநீரினால் சீறுநீரக நோய்க்கு மக்கள் உள்ளாகின்றனர். இதனை நிவர்த்த செய்வதற்காகவே இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்தரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் இன்று வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரின் வருகையினால் ஏ9 வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டது.