வவுனியா மத்திய பேரூந்த தரிப்பிடத்திலுள்ள ஒலிப்படக்கலையகம் நேற்று இரவு இனந்தெரியாதவர்களினால் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திலுள்ள வியாபார கட்டடித் தொகுதியிலுள்ள சிடி விற்பனை நிலையம் நேற்று இரவு 8.30 மணிக்கு பேரூந்து தரிப்பிடத்திலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் கடைத் தொகுதியினை பாதுகாப்பாக பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
எனினும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்று கடைத் தொகுதிக்கான பிரதான வீதியினைத் திறந்துவிட்டுள்ளார். குறித்த கடையின் அருகிலுள்ள கடை உரிமையாளர் இன்று காலை தனது வியாபார நிலையத்தினைச் திறக்கச் சென்ற போது குறித்த வியாபார நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக கடை உரிமையாளருக்குத் தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிசாரிற்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே மத்திய பேரூந்து கடைத் தொகுதியிலுள்ள பிறிதொரு கடையும் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டள்ளமை தெரியவந்துள்ளது.
இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் திருட்டு தொடர்பாக விபரங்களைக் கேட்டறிந்ததுடன் பெறுமதியான பணம் திருடப்பட்டுள்ளதாகவும் குறித்த வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்ட சி. சி. ரி கமரா செயற்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

























