ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித் சாண்டிலாவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சில விஷயங்கள் தொடர்பு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அஜீத் சண்டிலா உள்ளிட்ட மூன்று பேரை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மேலும் 6 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இவர்களில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோர் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.