வவுனியாவில் கடந்த 17.11.2016 அன்று வடமாணங்களில் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட 4பேரை கைது செய்து பொலிசார் அவர்களிடம் மேற்கொண்டமேலதிக விசாரணைகளின் போது மேலும் சில ஆயுதங்கள், இரண்டு கத்தி, கை உறை இரண்டு, டோச்லைற் இரண்டு, ஒரு குறடு என்பனவற்றை மேலதிக விசாரணைகளின் போது குறித்த நபர்களிடம் கைப்பற்றியுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவர்களை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








