சாரதிகள் 25000 ரூபா தண்டப்பணத்தை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா?

732

acci
போக்குவரத்து சட்டத்தை மீறுவது தொடர்பிலான பாரிய 7 குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்படும் குறைந்தப்பட்ச தண்டப்பணமாக 25000 ரூபாயாக வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் தீர்மானத்தின்படி சிறைத் தண்டனை விதிக்கலாம் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செல்லுப்படியாகும் சாரதி அனுமதி பத்திரம் இன்றி பயணித்தல், செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை செலுத்துவதற்கு இடமளித்தல், வலது பக்கத்தில் முன் கொண்டு செல்தல், ரயில் பாதையில் சட்டத்தை மீறுதல், மதுபோதையில் வாகனத்தை ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகத்தை ஓட்டுதல் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்டுதல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது.

அந்த தண்ட பணத்தை செலுத்தாத நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன்னால் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும். அதன் போது நீதவான் உரிய தண்டப்பணமான 25000 ரூபாயை விடவும் அதிகமாக விதிக்கப்படும் என சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த தண்டப்பணத்தை செலுத்தவில்லை என்றால் நீதிமன்ற உத்தரவிற்கமை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது சட்டத்தரணிகளின் கருத்தாகும்.