புலியிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய 5 வயது சிறுமி!!(வீடியோ)

428

acci
சவுதி அரேபியாவில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நபர் ஒருவர் தமது வளர்ப்பு புலியை அழைத்து வந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய நடைபாதை வழியாக புலியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த பாதை வழியாக 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தமது குடும்பத்தினருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அதுவரை தமது உரிமையாளருடன் மெதுவாக மிகவும் சாதுவாக நடந்து சென்றுகொண்டிருந்த புலியானது திடீரென்று குறித்த சிறுமியின் மீது பாய்ந்து கடிக்க முயற்சித்தது.

இதில் அந்த சிறுமி நொடிப்பொழுதில் உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது பாதுகாப்பு மற்றும் உரிய நடைமுறைகள் எதுவும் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கடைபிடிக்க தவறியது ஏன் என்ற கேள்வியை பொதுமக்களில் பலரும் எழுப்பியுள்ளனர்.

பழக்கபட்ட புலி என்றாலும் கூட குறித்த சம்பவத்தை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று ஒருவர் கோபமாக கேட்டுள்ளார். காட்டு விலங்குகளை தற்போது வீட்டு பிராணிகளாக வளர்த்து வருவது கண்டிக்கத்தக்க விடயம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.