வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியரால் தாக்கப்பட்ட 2ம் தர மாணவர் வைத்தியசாலையில்!!

269

acci
வவுனியா பிரபல பாடசாலையொன்றில் ஆரம்பப்பிரிவில் நேற்று ( 23.11.2016) ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலையொன்றில் நேற்று (23.11.2016) ஆசிரியர் கூறியதைக் கேட்காததால் கோபமடைந்த ஆசிரியர் யோ.விஷால் என்ற தரம் 2 மாணவனைத் தாக்கியுள்ளதார். இதனால் காயமடைந்த மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த மாணவனின் தந்தை தெரிவிக்கும்போது..

எனது மகன் மீது குறித்த ஆசிரியர் காலை 9 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் மகனின் காதுப் பகுதியிலிருந்து இரத்தம் வெளியேறியுள்ளது.

ஆனால் எனக்கு இது தொடர்பாக தெரிவிக்கவும் இல்லை மருத்துவமனையில் அனுமதிக்கவும் இல்லை. மதியம் 12 மணியளவில் பாடசாலைக்கு மகனை அழைத்துவரச் சென்ற போது தான் மகனின் காதுப் பகுதியில் இரத்தம் வழிந்தமையினை அவதானித்து அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதித்ததாகத் தெரிவித்தார்.

மேலும் குறித்த ஆசிரியர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனுக்கு அடித்து விட்டேன் தயவு செய்து பொலிஸில் முறைப்பாடுகள் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்

இச் சம்பவம் தொடர்பாக தந்தையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
acci