வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 7ம் ஒழுங்கை மற்றும் கோவில்குளம் 10ம் ஒழுங்கை ஆகிய வீதிகளில் புனரமைப்புக்காக வீதியில் கொட்டப்பட்டு கிடக்கும் மண்குவியலால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக வீதியின் நடுவில் கொட்டப்பட்டுக் கிடக்கும் மண்குவியலினால் மழை நேரத்தில் வீதியில் பயணிக்க முடியாமால் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இவ் மண்குவியலில் மோதி ஒருவர் விபத்துக்குள்ளாது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போது மழை பெய்துவருவதால் இம் மண் குவியல்களால் இவ்விடம் வயல் போன்று காட்சி தருகின்றது. பயணிக்கும் வாகனங்கள் வீதியில் இருந்து வழுக்கி பயணிக்க முடியாமல் திணறுவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இவற்றுக்கு உரியவர்கள் கவனமெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.















