நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 1 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
நடிகர் அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஏழாவது முறையாக தொடர்ந்து நடத்தப்படும் இந்த பொது அறிவு கேள்வி பதில் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் உதய்பூரை சேர்ந்த தாஜ் முகமது என்ற நபர் முதல் பரிசான 1 கோடி ரூபாயை வென்று உள்ளார்.
இந்த பணத்தை வைத்து கண் பார்வையில்லாத தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக தாஜ் முகமது கூறினார்.
செப்டம்பர் 15ம் திகதி இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.