மஸ்கெலியா கோர்த்தி தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று சிறார்களும், 32, 36 மற்றும் 42 வயதான மூவர் உள்ளிட்ட ஆறு பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்திற்கு இலக்கானவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் நேற்று (23) மாலை 4.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்திற்கு இலக்கானவர்களின் நிலை பாரதூரமாக இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.