கட்டுநாயக்க விமான நிலைய கணினி கட்டமைப்பு செயலிழப்பு : பயணிகள் அவதி!!

1385

kattunayaka

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயங்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக தெரியவருகிறது.

விமான நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள தொலைப்பேசி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலைமையே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குடிவரவு, குடியகல்வு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சற்று நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.