நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

604

ilancheliyan

முகநூலில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை விமர்சித்த இளைஞர் ஒருவரைபொலிஸார் கைதுசெய்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் சுட்டுச் சம்பவத்திற்கு பின்னர் வவுனியாமாவட்டத்தினைச் சேர்ந்த ந. ஜக்சன் என்ற இளைஞரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியைகடுமையான பல விமர்சனங்களை முன் வைத்து விமர்சித்திருந்தார்.

அந்த விமர்சனத்தின் பின்னர், குறித்த நபர் நேற்று புதன்கிழமை யாழ். நீதிமன்றில்அவருக்கு எதிரான காசு சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றிற்கு வருகை தந்திருந்த போது,நீதிபதியினால் அடையாளப்படுத்தப்பட்டதன் பின்னர் பொலிஸார் அவரை கைதுசெய்துபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

மேற்படி நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில்,இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்வார்கள் என்றும், அதன்பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அவர்கள்மேற்கொள்வார்கள் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.