இலங்கையில் பூத்த அரிய வகை மலர்!!

918

flower

ஹங்குராங்கெத்தை பிரதேசத்தில் அரிய வகை மலர் ஒன்று மலர்ந்துள்ளது. Kidaram என அழைக்கப்படும் அரிய வகை மலர் மலர்வது ஒரு அரிய விடயமாகும்.

Kidaram மலரின் கிழங்கு உணவிற்கு பெற்றுக் கொள்ளப்படும். இதனால் இதில் மலர் மலர்வதனை பார்ப்பதென்பது மிக அரிய காட்சியாகும்.

தற்போது இந்த மலர் ஹங்குராங்கெத்தை பிரதேசத்தில் மலர்ந்துள்ளது. குறித்த மலரினை பார்வையிடுவதற்கு ஏராளமான பொது மக்கள் அங்கு செல்லவதாக தெரிய வருகிறது.

இந்த மலர் நறுமணம் வீசுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுவது சிறப்பம்சம். குறித்த மலரில் உள்ள கிழங்கு வகை உள்நாட்டு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.