மதவாச்சியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!!

472

 
மதவாச்சி பகுதியில் வெடிப்பொருட்கள் உட்பட இராணுவ உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இசின்பெஸ்கல பிரதேசத்தில் கற்குழியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளர்.

பூனெவ இராணுவ முகாமிற்கு கிடைத்த புலனாய்வு தகவல்களுக்கமைய நேற்று மாலை மாதவாச்சி பொலிஸார், கெபித்திகொல்லேவ பொலிஸார் மற்றும் அநுராதபுரம் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த வெடிப்பொருட்கள் உட்பட இராணுவ உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இசென்பெஸ்பல பிரதேசத்தில் உள்ள கற்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2634 ஜெலட்நைட் குச்சிகள், 1922 மின்சார டெட்டநேட்டர்கள் , மின்சாரமற்ற 50 டெட்டநேட்டர்கள், 6580 மீற்றர் சேவை நூல் வகைகள், 45 கிலோ கறுப்பு வெடி மருந்து உட்பட மேலும் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

21 22 23 24