இறந்த பூனைக்கு 2½ கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்!!

562

cat

பாகிஸ்தானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுந்தஸ்கோரின். இவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.

அங்குள்ள கால்நடை வைத்தியரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. நோய் மேலும் அதிகரித்தது. இதனால் பூனையை வேறு வைத்தியரிடம் கொண்டு சென்றார்.

அதற்குள் பூனை இறந்து விட்டது. ஏற்கனவே சிகிச்சை அளித்த வைத்தியர் தவறுதலாக சிகிச்சை அளித்ததால் பூனை இறந்து விட்டதாக கூறி அவர் மீது ரூ. 2½ கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.