வவுனியா சேமமடு பகுதி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுரேஸ் இந்திக்க சில்வா தலமையிலான குழுவினர் இன்று (25.11.2016) காலை 10.05 மணிக்கு சேமமடு அலகல்ல பகுதியில் 9 முதிரைக்குற்றிகளை வாகனத்துடன் சாரதியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
பல நாட்களாக குறித்த நபர் சட்டவிரேதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் கைப்பற்றப்பட்ட இரண்டரை லட்சம் பெறுமதியான 9 முதிரைக் குற்றிகளையும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.











