வவுனியாவில் கடந்த 17.11.2016 அன்று வடமாணங்களில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 4பேரை கைது செய்து பொலிசார் அவர்களிடம் மேற்கொண்டமேலதிக விசாரணைகளின் போது அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்களை மீட்டனர்.
நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (25.11.2016) உத்தியோகப்பற்ற்ற பதில் நீதவான் ப.அன்ரன் புனிதநாயகம் அவர்களின் அலுவலகத்தில் பொலிஸார் ஆயர்படுத்தினர்.
நால்வரையும் 2016.12.09ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு பதில் நீதவான் ப.அன்ரன் புனிதநாயகம் தீர்ப்பளித்தார்.
இதன் போது செய்தி சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை சந்தேகநபர்கள் தகாத வார்ததையினால் பேசியமை குறிப்பிடத்தக்கது.











