மன்னாரில் பாரிய பஸ் விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

218

accident

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், பேருந்து ஒன்று இன்று இரவு (25) மன்னார் பிரதான பாலத்திற்கருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச பேருந்து ஒன்றின் சாரதிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி தன்மை காரணமாகவே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி உட்பட 07 பேர் வரையில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் போட்டி தன்மை ஏற்பட்டு வருகின்றமையினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

a1 a2