கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் கெஸ்ட்ரோ காலமானார்!!

570

fidel-castro

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனிஸ் புரட்சித் தலைவருமான பிடேல் கெஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார்.

உள்ளூர் நேரப்படி இன்று இரவு 07 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஃபிடல் காஸ்ட்ரோ, வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை மரணம் அடைந்தார்.

மிக நீண்ட காலம் அந்த நாட்டு ஜனாதிபதியாக பதவி வகித்த பிடல் கெஸ்ட்ரோ, கடந்த 2008ம் ஆண்டு ஆட்சியை தனது சகோதரனான ராவுல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார்.

1920ம் ஆண்டு தென் கிழக்கு கியூபாவின் ஒரியன்டே மாகாணத்தில் பிறந்த பிடெல் கெஸ்ட்ரோ, கியூபாவில் புரட்சி மூலம் 1959ல் ஆட்சி அதிகாரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார்.

1959 முதல் 1976ம் ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்து பின்னர் 1976ம் ஆண்டு அந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

கியூபா ஒரு கம்யூனிச தேசமாக உயிர்த்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், பிடல் கெஸ்ட்ரோ.

அமெரிக்க கண்டத்தில் கம்யூனிச ஆட்சி நடைபெறும் ஒரே நாடு கியூபா என்பது குறிப்பிடத்தக்கது. பிடல் கெஸ்ட்ரோ இல்லையென்றால், கியூபா அமெரிக்காவின் ஒரு மாநிலமாகவே இருந்திருக்கும்.