வவுனியா சுதந்திரபுரத்தில் கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு சாந்த நாயகி நற்பணி மன்ற உறுதுணையுடன் அநீதிக்கும், அடக்குமுறைக்குமான அமையத்தின் ஏற்பாட்டில் முகவும் எழுச்சிபூர்வவாமாக கொண்டாடப்பட்டது. இன் நிகழ்வில் சந்திரகுமார் கண்ணன், மாணிக்கம் ஜெகன், செ.சபாநாதன், மாவீரர் குடும்பங்கள் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்..
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில் நினைவேந்தல் நிகழ்வை இறை ஆசியுடன் ஆரம்பித்து பின்னர் நினைவேந்தல் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இந் நாளில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் அக வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இருபது மாவீரர் குடும்பங்களுக்கான உணவுப்பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.



























