வவுனியாவில் மாவீரர் தின நிகழ்வு : பாரளுமன்ற உறுப்பினரிடம் ஒருவர் வாக்குவாதம்!!

918

 
வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர் மாதிரிக்கு இன்று 27.11.2016 மாலை 6.05 மணிக்கு சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் திரு.ராஜ்குமார், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராஜன், கையளிக்கப்பட்ட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி திருமதி. ஜெயவதனா, மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மலர் அஞ்சலியையடுத்து ஈகச்சுடரினை சிவசக்தி ஆனந்தன், பிரஜைகள் குழுவின் தலைவர் இணைந்து ஏற்றி வைத்தனர். ஈகச்சுடர் ஏற்றும்போது வணக்கம் சொல்லி வணங்குகின்றோம் எங்கள் வீரர் உங்கள் மலர்பாதம் எனும் பாடலுடன் உணர்வு பூர்வமான ஆரம்பமானது. அஞ்சலி செலுத்திய உறவினர்களின் கதறலுக்கு மத்தியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஆரம்பமான சமயத்தில் பொதுமகன் ஒருவர் அஞ்சலி செலுத்தப்பட்ட இடத்தில் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதப்பட்டார். யுத்தத்தில் மாவீரர்களாக இறந்தவர்களின் புகைப்படம் இங்கு வைத்து அஞ்சலி செலுத்தவில்லை இதுவரை மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றார்கள் செய்தார்களா? என பாராளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பினார்.

1 dsc_0004 dsc_0005 dsc_0008 dsc_0015 dsc_0016 dsc_0017 dsc_0018 dsc_0019 dsc_0020 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0027 dsc_0031 dsc_0034 dsc_0035 dsc_0038 dsc_0039 dsc_0040 dsc_0042 dsc_0043 dsc_0045 dsc_0046 dsc_0047 dsc_0048 dsc_0050 dsc_0051 dsc_0052 dsc_0053 dsc_0056 dsc_0057 dsc_0058 dsc_0060 dsc_0061 dsc_0062 dsc_0064 dsc_0067 dsc_0068 dsc_0069 dsc_0070 dsc_0071 dsc_0073 dsc_0074