துறவறம் பூண்டிருந்த 15 வயதான இளம் துறவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தியதுடன் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 வயதான பெண் ஒருவர் 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுது ஹங்ஸி என்ற பெயரில் போலியான பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பித்து அதன்மூலம் குறித்த இளம் துறவியுடன் அவிசாவளை, உடுவல பிரதேசத்தை சேர்ந்த இப்பெண் காதல் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே திருமணமான இப்பெண்ணுக்கு 6 மற்றும் 9 வயதுகளில் இரு மகள்மார் உள்ள நிலையில் அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் இப்பெண் சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னர் தனது இருமகள்களை அழைத்துக்கு கொண்டு காதலனான பிக்குவைச் சந்திப்பதற்காக அவர் வசித்துவரும் தம்புள்ளையிலுள்ள விகாரைக்கு சென்றதுடன் அங்கிருந்த விகாராதிபதியிடம் குறித்த இளம் பிக்கு தனது சகோதரன் எனவும் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் விகாரையின் மடத்தில் தங்கியதுடன் இரவு 1 மணியளவில் பிக்குவை அழைத்துக் கொண்டு தெஹியோவிட்ட பிரதேசத்திலுள் தனது வீட்டுக்கு சென்று கணவன் மனைவிபோல வசித்து வந்துள்ளார்.
அதன்போது இப்பிக்கு சந்தேக நபரான பெண்ணிளால் கடுமையாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது இவ்வாறிருக்கையில், அப்பெண் தன்னைத் தவிர மேலும் சிலருடனுடன் தொடர்புகளை பேணிவருவதாக அறிந்துகொண்ட பிக்கு அப்பெண்ணுக்குத் தெரியாமல் அங்கிருந்து சென்று அவிசாவளை நகரிலுள்ள உணவகமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
எனினும், இளம் பிக்குவின் பேஸ்புக் காதலி, அவரை தேடிக்கண்டுபிடித்து சீதாவக்கை பிரதேசத்தில் தான் பணியாற்றிவரும் ஆடைத்தொழிற்சாலையில் அவருக்கு தொழிலை பெற்றுக்கொடுத்ததுடன் பணிநேரங்களிலும் பிக்குவிடம் சில்மிஷங்களை புரிந்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த குறித்த அந்தப் பிக்கு அப்பெண் பணிநிறைவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது கடுமையாக தாக்கியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பிக்கு கணவன் தன்னை தாக்கியதாக இப்பெண் அவிசாவளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அப்பெண்ணை தாக்கிய அவரின் கணவர் 15 வயது சிறுவனென தெரியவரவே முறைப்பாட்டாளரான பெண் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் நேற்றுமுன்தினம் அவிசாவளை நீதிவான் மன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மீண்டும் டிசம்பர் 6 ஆம் திகதி மன்றில் ஆஜரானுமாறு உத்தரவிடப்பட்டது.






