நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்பது குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் இயக்குனர் மற்றும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இதுகுறித்து வாய் திறந்துள்ளார்.
சிவங்கையை சேர்ந்த தம்பதிகள் தனுஷ் தங்களுடைய மகன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெிவித்துள்ள கஸ்தூரி ராஜா கூறியதாவது, தனுஷ் என் மகன் அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ள செய்தி அறிந்து வருத்தமாக உள்ளது.
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. நீதித்துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என்று வருத்தமாக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய நண்பர்களுக்கு நன்கு தெரியும். எனது மகன் தனுஷை சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.