வவுனியாவில் அறநெறிப் பாடசாலையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கொரவிப்பு!!

1467

 
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டினை முன்னிட்டும் 2016 குருபூசை தினத்தை முன்னிட்டும் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கீழ்ப்பிரிவு வவுனியா தோணிக்கல் ஆதி சிவன் அறநெறிப்பாடசாலையின் மாணவியான ராஜ்குமார் ஹரிஷ்கனா தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளதை முன்னிட்டு நேற்று முன்தினம் (27.11.2016) மாலை 4 மணிக்கு ஆதி சிவன் அறநெறிப்பாடசாலையில் தோணிக்கல் ஆதிசிவன் ஆலய பரிபாலகர் சபையினரால் மாணவிக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இம்மாணவியை தயார் படுத்திய அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி பேபி சுதாகரன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

அதேவேளை குறித்த அறநெறிப்பாடசாலையின் மாவட்ட மட்டத்தில் குழு நிகழ்வில் குராணபடனத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாசிலாமணி கரிஷ், ஜெயராம் ரதீசன் ஆகிய இரு மாணவர்களுக்கும் நினைவுக் கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தோணிக்கல் ஆதிசிவன் ஆலய பரிகாலகர் சபையின் தலைவர் து.கனகரத்தினம், பொருளாலர் திருமதி கதிர்காமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 p1230185 p1230190 p1230192 p1230194 p1230197 p1230198 p1230200 p1230202 p1230203 p1230205