முறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!!

510

acci

கிளிநொச்சி. முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்

அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்றும், மல்லாவியிலிருந்து கீரிமலை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.