பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, தண்ணீர்த் தாரைப் பிரயோகம் : போர்களமானது பாராளுமன்றப் பகுதி!!

1213

1

பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்படும் போது கலகத்தடுப்பு பொலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

சுமார் 3000 மாணவர்களை சுற்றிவளைத்து பொலிஸார் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக் கோரியும், இலவச கல்விக்கு முன்னுரிமை கொடுக்கக் கோரியுமே பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

2 3