எனது பேத்தியை மயக்கிவிட்டான் : பிரபல கவர்ச்சி நடிகையின் பாட்டி பரபரப்புப் புகார்!!

753

babilona

பிரபல நடிகை பாபிலோனாவின் பாட்டி கிருஷ்ணகுமாரி, சென்னை சாலிக்கிராமத்தில் வசிக்கும் இவர் கமிஷனர் அலுவலகத்தில் வந்து புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், பாபிலோனாவை நான் தான் வளர்த்தேன், திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதும் நான் தான்.
தற்போது அவர் மந்திரவாதி சுந்தர் பாபுல்ராஜ் பிடியில் சிக்கியுள்ளார்.

எனது பேத்தியை வசியப்படுத்தியதுடன் பணம், நகைகளை பறித்து கொண்டார். பாபிலோனாவை விட்டுவிடும்படி கெஞ்சினேன், அதற்கு என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

குறித்த மந்திரவாதி ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார், எனது பேத்தியின் உயிருக்கும் ஆபத்துள்ளது.

எனவே மந்திரவாதி மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பேத்தியை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.