வெல்லம்பிட்டிய கித்தம்பஹுவ பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ததாக கூறப்படும் மகன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான மகனால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த அவரது தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 79 வயதானவொருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






