வவுனியாவில் கிராமசேவையாளர் ஒருவர் இன்று (30.11.2016) பிற்பகல் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா மூன்றுமுறிப்பு கிராமசேவையாளர் பிரிவில் கடமையாற்றி வந்த கிராமசேவையாளர் இன்று பிற்பகல் தனது அலுவலகத்தில் வைத்து கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராமசேவையாளர் லஞ்சம் பெற்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட கிராமசேவையாளர் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.






