வவுனியா குழுமாட்டுச்சந்தியில் இன்று (30.11.2016) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் வேப்பங்குளத்திலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண் உட்பட நால்வர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இவ் விபத்து தொடர்பாக மேலதிக தகவல்களை அறியமுடியாது உள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொதுமகன் ஒருவரிடம் வினவியபோது..
பாரிய பாட்டுச் சத்தத்துடன் வேகமாக முச்சக்கரவண்டியொன்று சென்று கொண்டிருந்தது. தீடீரென பாளார் என ஒரு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் இரு முச்சக்கரவண்டிகளும் விபத்துக்குள்ளாகி ஒரு முச்சக்கரவண்டி தடம்புரண்டு கிடந்தது. உடனே பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தாக தெரிவித்தார்.






















