இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!!

604

bus

போக்குவரத்து துறையிலுள்ள சில தொழிற் சங்கங்கள் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.

இரண்டு பஸ் சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சம்மேளன தலைவர் அஞ்சன பிரியன்ஜன பிரியந்தஜித் தெரிவித்துள்ளார்.

தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கொள்கலன் வாகன சாரதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் குமார ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.