போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை நீக்குமாறு வலியுறுத்தி இன்று (01.12.2016) நள்ளிரவில் இருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கடுவலை பஸ்தரிப்பு நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் நேற்று சில தொழிற்சங்கங்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.






